நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை

486 0
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஆலய மரபின் படி, நல்லூரில் உள்ள செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக்கொடிசீலை இன்று ஒப்படைக்கப்பட்டது.
யாழ்ப்பாண நட்டநாதர் சிவன் ஆலையத்துக்கு அருகில் உள்ள வேல்மடம் முருகன் ஆலையத்தில் இன்று காலை 9 மணிக்கு இதற்கான விசேட பூஜை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா, தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
அடுத்த மாதம் 20ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 21ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment