கிணற்றில் வீழ்ந்தவரும் மீட்கச் சென்றவர்களும் பலி

220 0

குருணாகலை – கிரியுள்ள – அதுருவெல பகுதியில் கிணற்றில் வீழ்ந்து 3 பேர் பலியாகினர்.
மங்கள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நபர் ஒருவர், பலகைகளைக் கொண்டு மூடப்பட்டிருந்த குறித்த கிணற்றினுள் வீழ்ந்துள்ளார்.
அவரை காப்பாற்றுவதற்காக ஏனைய இரண்டு பேரும் கிணற்றில் இறங்கிய நிலையில், மூன்று பேருமே உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவி

 

த்துள்ளனர்.
பலியானவர்கள் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கேகாலை – இம்புல்கஸ்தெனிய பகுதியில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்னொருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதை அடுத்து, அவர் கொலை செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் 38 வயதான அதே பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை சந்தேகநபர் குறித்த பிரதேசத்தில் இருந்த தலைமறைவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment