நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம்: குழுவை நியமிக்க அனுமதி

225 0

நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையின் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அவ் வைத்தியசாலையினை பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் இணைக்க வேண்டியுள்ளது. 
அச் செயற் திட்டத்தினை முன்னெடுக்கும் வரை குறித்த வைத்தியசாலையினை முன்னெடுத்துச் செல்வதற்காக, முன்னாள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் யு.ஏ.அஜித் மெண்டிஸ் தலைமையிலான நிபுணர்கள் அடங்கிய நிர்வாக குழுவொன்றினை, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், அமைச்சுக்கு 2017ம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து மாதாந்தம் 200 மில்லியன் ரூபாவை இதற்காக வழங்குவதற்கும் யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைக் குறிபிட்டுள்ளார்.

Leave a comment