ஹம்பாந்தொட்ட முறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நாளைய தினம் மேற்கொள்ள அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர்கள் சங்கம் நடத்தவுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அந்த சங்கத்தின் செயலாளர் ஷந்ரசிறி மஹாகமகே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் துறைமுக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.