பயணியைத் தாக்கிய ரயில் நிலைய ஊழியர்கள் மூவர் கைது

308 0

பயணி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டுத் தொடர்பில், சிலாபம் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு ஊழியர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2ம் திகதி அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணிக்க முற்பட்டதாக கூறப்படும் ஒருவர் ரயில் நிலைய பொறுப்பதிகாரியால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

எதுஎவ்வாறு இருப்பினும், தான் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறிய அவர், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, குறித்த பயணி, ரயில் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் தன்னைத் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, விசாரணைகளை மேற்கொண்டு தகவலளிக்குமாறு, பொலிஸாருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், நேற்றையதினம் சந்தேகநபர்களான ரயில் நிலைய பொறுப்பதிகாரி, பாதுகாப்பு ஊழியர் மற்றும் பிறிதொரு ஊழியரும் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைதாகினர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment