அர்ஜுன் மகேந்திரனின், கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஒப்படைக்க உத்தரவு

229 0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின், பிணை முறி விநியோகம் இடம்பெற்ற காலப்பகுதியில் பயன்படுத்திய கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டள்ளது.

பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோஸியஸின் கைத்தொலைப்பேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஒப்படைக்குமாறும் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்து.

இதற்கமைய, அவர் குறித்த சாதனங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் நேற்று முன்தினம் கையளித்திருந்தார்.

எனினும், அவை கடந்த ஆறு மாதங்களில் அர்ஜுன் அலோஸியஸால் பயன்படுத்தப்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அர்ஜுன் மகேந்திரனின், கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment