அமைச்சர் ரவி முன்வைத்த பத்திரங்களை நிராகரித்தார் ஜனாதிபதி

4116 0

அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று அமைச்சரவையில் முன்வைத்த 3 பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசும்பாய அரசாங்க குடியிருப்பை வெளிவிவகார அமைச்சின் கீழ்கொண்டுவரவும், வெளிவிவகார அமைச்சுக்கான புதிய தலைமை அதிகாரி ஒருவரை நியமித்து, அவருக்கு சகல வரப்பிரசாதங்களுடன் 250,000 ரூபா வேதனம் வழங்கவும் இரண்டு பத்திரங்களை அவர் முன்வைத்தார்.

இவற்றை ஜனாதிபதி உடனடியாக நிராகரித்தார்.

அத்துடன் டெல்லியில் உள்ள மஹாபோதி கட்டிடத்தை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்காக அவர் முன்வைத்த யோசனையை, புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ எதிர்த்ததை அடுத்து, அதனையும் ஜனாதிபதி நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment