அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது

236 0

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை இன்று பிற்பகல் 4 மணியுடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.மருத்துபீட மாணவ செயற்பாட்டாளர் ரயன் ஜெயலத்தை கைதுசெய்ய முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணிமுதல் குறித்த அடையாள பணிப் புற்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

எனினும், அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தை விலக்கிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a comment