இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட தங்கம் இந்தியாவில் சிக்கியது

355 0
இலங்கையில் இருந்து ஒரேநாளில்  கடல்வழியாக இரு பகுதிகளாக கடத்தப்பட்ட 29 கிலோ தங்கம் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுயில் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து படகுமூலம் ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு கடத்திச் செல்லப்பட்டு   2 கிலோ தங்கத்தை காரில் கொண்டு சென்றபோது   ராமநாதபுரம் மாவட்டத்தில் வைத்து  ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேபோன்று மற்றுமோர் படகின் மூலம் கடத்தப்பட்ட 27 கிலோ தங்கம்  ராமநாதபுரத்தின் பிறிதொரு பகுதியில் கைப்பற்றியுள்ளனர்.  இவ்வாறு ஒரேநாளில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 29 கிலோ தங்கம் இந்திய சுங்கத்துறையினரிடம் அகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment