அலைபேசியை கையளிக்குமாறு அர்ஜுனவுக்கு உத்தரவு

233 0

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான விசாரணைகளுக்காக அர்ஜுன் அலோசியஷின் அலைபேசியை குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேப்ர்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஷ், பிரச்சினைக்குரிய பிணைமுறி விநியோக நடவடிக்கை இடம்பெற்ற 2015 – 2016 காலப்பகுதியில் பயன்படுத்திய அலைபேசி உள்ளிட்ட சகல டிஜிட்டல்உ பகரணங்களையும் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிணைமுறி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

Leave a comment