நீதிபதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்

234 0

நீதிபதிகளுக்கு வழங்கும் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான தேவைப்பாட்டை மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டும் என, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகளுக்கு வழங்கும் பாதுகாப்பை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அச் சங்கத்தின் தலைவர் யூ.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளுக்கான பாதுகாப்பு குறித்து பொலிஸ் மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விஷேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், அது நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து பிரச்சினை காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment