காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானது அல்ல

361 0

Mano-Ganesanஇராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் செயற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரச கரும மொழிகள்துறை அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பிரச்சினை என்பது வடக்குகிழக்கு பகுதிகளை சேர்ந்த மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல.

அது தெற்கிலும் உள்ள பிரச்சினையாகும்.

எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காணுவதற்காகவே அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.