மொணராகலை நகரில் பஸ் ஒன்று தீக்கிரை

328 0

மொணராகலை நகரில் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. மொணராகலை – வெல்லவாய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும், பஸ்ஸின் பின் பகுதி இதனால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், இயந்திரக் கோளாரே தீக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மொணராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment