இலங்கையில் வரட்சி – 10 லட்சம் பேர் பாதிப்பு

415 0

பன்னிரண்டு மாவட்டங்கள் முகம்  கொடுத்துள்ள வரட்சியான காலநிலையால் பத்துலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பெருமளவு வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

 

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வரட்சி ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குறுகிய காலத்தில் மழை பெய்யக் கூடும் என்பதை எதிர்பார்க்க முடியாது என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a comment