ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் இலங்கை தொடர்பான கருத்து – பிரித்தானியா கவனம்

322 0

ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கான சிறப்பு அறிக்கையாளரின் இலங்கை தொடர்பான கருத்து குறித்து பிரித்தானியா, கவனம் செலுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பேன் எமர்சன் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தநிலையில் தமது கருத்தை வெளியிட்டிருந்தார்.

அதில், இலங்கையில் சித்திரவதை சம்பவங்கள் தொற்றுவியாதியை போன்று இடம்பெறுவதாகவும் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மெதுவான போக்கில் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் தமது நாடு இந்த விடயத்தில் கரிசனையை செலுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

Leave a comment