இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு ஹேரத் தலைவர்

254 0

இந்திய அணிக்கும் இலங்கை கிரிக்கட் தலைவர் பதினொருவர் அணிக்கும் இடையேயான இரண்டு நாள் பயிற்சி டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்று ஆரம்பித்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கட் தலைவர் பதினொருவர் அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை, இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமால் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தினேஸ் சந்திமால், நேற்றுக் காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் 26 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகும் முதலாவது டெஸ்ட் போட்டியிலும், அதனை அடுத்த போட்டியிலும் ரங்கன ஹேரத் இலங்கை அiணிக்குத் தலைமை தாங்கவுள்ளார்.

Leave a comment