ஒரு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இருவர் கைது

3564 0

தியதலாவ – பண்டாரவளை வீதி கஹகொல்ல பிரதேசத்தில், அனுமதிப்பத்திரமின்றி  மரக்குற்றிகளை கொண்டு சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் காவற்துறையின் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாரவூர்தி மற்றும்  மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த மரக்குற்றிகள் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment