யாழ் வேம்படி மகளீர் கல்லூரியில் நஞ்சுதிரவம் விழுந்து 16 மாணவர்களுக்கு பாதிப்பு

387 0
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையில் இன்று காலை நடைபெற்ற
காலை கூட்டத்தின் போது மஞ்சள் நிற திரவம் வானத்தில் இருந்து விழுந்ததினால் 16
மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர்
வேணுகா சண்முகரட்ணம் தெரிவித்தார்.
எனினும் சம்பவம் நடைபெற்றவுடன் மாணவர்கள் பலர் தமக்கு எரிவு ஏற்படுவதாக
தெரிவித்தை அடுத்து, உடனடியாக பிராந்திய சுகாதார பணிமனைக்கு அறிவித்ததாகவும், உடனடியாக அவர்கள் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு  வானத்தில் இருந்து விழுந்திருந்த திரவத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். ஒரு மாணவி மயங்கியதாகவும், பின்னர் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டதாகவும்  தெரிவித்த பாடசாலை அதிபர், பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்றதாகவும், இது போன்ற சம்பவம் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றதாகவும்  தெரிவித்தார். மஞ்சள் திரவம் விழுந்த நேரம் வானத்தில் ஜெட் ரக விமானம் பயணித்தாகவும் கல்லூரி அதிபர் தெரிவித்தார்.

Leave a comment