முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.ஏ.பி ரணவக்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இருவரும் தலா 10 லட்சம் ரூபா சரீர பிணையில் செய்ய கடுவளை நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முன்னதாக, பசில் ராஜபக்ஸ மற்றும் ஆர்.ஏ.பி ரணவக்க ஆகியோருக்கு பிணை வழங்குமாறு, கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.
இவர்களால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்;ட போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
கடுவளை நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட பிணை கோரிக்கையை, மீளாய்வுசெய்யுமாறும்; கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படியே, இன்று பிற்பகல் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
திவிநெகும திணைக்களத்தின் 43 லட்சம் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.ஏ.பி ரணவக்க ஆகியோரை, கடந்த 18ஆம் திகதி கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- பசிலுக்கு பிணை
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

