முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.ஏ.பி ரணவக்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இருவரும் தலா 10 லட்சம் ரூபா சரீர பிணையில் செய்ய கடுவளை நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முன்னதாக, பசில் ராஜபக்ஸ மற்றும் ஆர்.ஏ.பி ரணவக்க ஆகியோருக்கு பிணை வழங்குமாறு, கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.
இவர்களால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்;ட போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
கடுவளை நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட பிணை கோரிக்கையை, மீளாய்வுசெய்யுமாறும்; கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படியே, இன்று பிற்பகல் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
திவிநெகும திணைக்களத்தின் 43 லட்சம் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.ஏ.பி ரணவக்க ஆகியோரை, கடந்த 18ஆம் திகதி கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- பசிலுக்கு பிணை
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
வெறுமனே கூடிக் கலைவதில் பயனில்லை!
May 13, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024
May 14, 2024 -
வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024
May 10, 2024 -
வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் 25.5.2024
May 7, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024