அரசின் எதிர்காலம் குறித்து சந்தேகம் இல்லை – சுகாதார அமைச்சர்

244 0

அரசின் எதிர்காலம் குறித்து சந்தேகம் இல்லை என்றும்இநல்லாட்சியின் இலக்கை அடைந்துக்கொள்ளும் அரசின் எதிர்காலத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதான இரு கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டு வரையும் உடன்படிக்கையின் கீழ் 2025 ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்யவும் சுகாதார அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் ஜைகா திட்டத்தின் கீழ் கல்கமுவ வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய வார்டினை திறந்து வைத்து உரையாற்றும்போதெ அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி செய்த சேவைகளை ரூபாயினால் அளவிட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத் துறையையும்இஉயர்கல்வியையும் தனியார் மயப்படுத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுவதாகவும்இஎனினும் உயர்கல்வி மற்றம் சுகாதாரத் துறையினை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலேயே அதிக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment