கொக்கெய்ன் மீட்பு – 7 பேரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

343 0

இரத்மலானையில் மீட்கப்பட்ட கொக்கெய்ன் போதை பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த 7 பேரும் நேற்று கல்கிஸ்ச நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட நிலையில் நீதவான் இதற்கான அனுமதியை அளித்தார்.
சுமார் 320 கோடி ரூபா பெறுமதியான 218 கிலோ 600 கிராம் நிறைக்கொண்ட கொக்கெய்ன் போதை பொருள் நேற்று முன்தினம் ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment