அரசாங்கத்திலிருந்து சென்றாலும் வேறு கட்சியில் இணையமாட்டேன் -மஹிந்த

244 0

அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றாலும் வேறு கட்சியில் இணையமாட்டேன் என்றும்இ ஏனைய கட்சிகள் வெற்றி பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டேன் என்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடுபூராகவும் கடற்கரை பிரதேசங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை வத்தளை பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய அரசாங்கம் ஒன்றாக இணைந்திருப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்இஒரு சிலர் இதிலிருந்து விலகுவார்களாயின் அது மத்திய குழுவின் முடிவுகளுக்கு அமையவே என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் சிலர் கட்சியிலிருந்து விலகுவார்களாயின் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுகூலமாக அமையும் என்றும் அவர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment