அப்துல் ராசிக்கிற்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது – ஞான­சார தேரர்

498 0

புத்தரை அவமதிப்புச் செய்த தௌஹீத் ஜமா அத்தின் அப்துர் ராசிக்கிற்கு ஒரு போதும் மன்னிப்புக் கிடையாது என பொது­பல சேனா  அமைப்பு தெரிவித்துள்ளது.

ராசிக் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும், அதற்காக நாம் இறுதி வரை போராடுவோம் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கல­கொட அத்தேர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் நடை­பெற்­று­வரும் புத்­தரை அவ­ம­தித்துப் பேசிய வழக்கில் தான் தவ­று­த­லாக புத்­தரை அவ­ம­தித்து விட்டேன் எனத் தெரி­வித்­தி­ருப்­பதும், வழக்கை முடி­வுக்கு கொண்­டு­வர, கோரி­யி­ருப்­பதும் வேடிக்­கை­யாக இருக்­கி­றது.

இது ஒரு மன்­னிக்க முடி­யாத குற்­ற­மாகும். புத்­தரை அவ­ம­தித்­தவர் தண்­டனை பெற்றே தீர வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment