மொறவௌ பகுதியில் பதற்றம்

21488 0

திருகோணமலை – மொறவௌ பகுதியில் உள்ள மிரிஸ்வெல பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை சுவீகரிக்க முற்பட்ட நிலையில் பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

யுத்தத்துக்கு முன்னர் இடம்பெயர்ந்து பின் மீண்டும் குறித்த காணியில் குடியேறிய நிலையில், அதனை அரசக்காணி என்று தெரிவித்து சுவீகரிக்க முற்படுவதற்கு மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த காணியின் உரிமையாளர் கல்லால் தம்மை தாக்கி காயப்படுத்திக் கொண்டு போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அளவீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Leave a comment