யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டம்

257 0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீட மாணவர்கள் கற்கை செயற்பாடுகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் எட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

கடந்த 19ம் திகதி பல்கலைக்கழகத்திற்கு புதிதாக வந்த மாணவர்களை பகிடிவதைக்கு உள்ளாக்கியதுடன், தாக்கியதாக குறித்த மாணவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினரும் விசாரணைகளை நடத்திய நிலையில், இரண்டு தரப்பினரும் சமாதானமாக செல்வதற்கு இணங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த மாணவர்களுக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டமை அநீதியானது என்று தெரிவித்து, விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment