குப்பை கொட்டுவதற்கு தடை

253 0

கொழும்பின் குப்பைகளை முத்துராஜவெலயில் கொட்டுவதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் விடுத்திருந்த இடைக்காலத் தடை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பான வழக்கு பிரதம நீதியரசர் ப்ர்சாத் டெப் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாமின் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பின் குப்பைகள், கொழும்பு நகரசபை ஊடாக முத்துராஜவெலயில் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் கொட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முத்துராஜவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 பேர் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தமை நிளைவூட்டத்தக்கது.

Leave a comment