அவுஸ்ரேலியாவில் தமிழர் ஒருவர், ஒரு மர்ம கும்பலிடம் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெர்த்தில் வசிக்கும் குறித்த தமிழர் ஒருவரிடமே இவ்வாறு பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
தாங்கள் மிகப்பெரும் சட்டவல்லுனர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், மஹிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்று தருவதாகவும், இலங்கையில் காணாமல் போன உறவுகளுக்கு நட்ட ஈடு பெற்றுத் தருவதாகவும் குறித்த தமிழரிடம் பெருந்தொகை பணத்தை பெற்றுள்ளனர்.
பின்னர் அந்த குழு தலைமறைவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் மிகப்பிரபலமான மேராக் அகதிக்கப்பல் மூலம் அவுஸ்திரேலியாவில் குடியேறிய தமிழரிடமே இவ்வாறு பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
அவர், அங்குள்ள தமிழர்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்பதுடன், தமிழர் சார்ந்த நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் ஒருவராகவும் காணப்படுகிறார்.
இந்த விடயம் குறித்த அதிகாரிகளுக்கு முறையிட்ட போதிலும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.