யேர்மன் தலைநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழா 2017

508 0

யேர்மன் தலைநகர் பேர்லினில் கடந்த சனிக்கிழமை அன்று தமிழர் விளையாட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழர் விளையாட்டுவிழாவில் பேர்லின் தமிழாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் இல்லப்போட்டி,தட கள விளையாட்டுக்கள் , உதைபந்தாட்ட போட்டி , ஈழத்தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் மாணவர்களின் உடல் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை சோதிக்கும் வண்ணம் அமைந்திருந்தது.ஒலிப்பிக் தீபம் இல்ல மாணவர்களால் ஏந்தி செல்லப்பட்டதை தொடர்ந்து, அணிவகுப்பு முதல் உடற்பயற்சி செய்முறை, தற்காப்பு கலை வரை அனைத்தும் மாணவர்களால் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் மிகவும் ஆர்வமாக தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிக் கேடையங்களை தமதாக்கி கொண்டனர்.தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழீழ வெற்றிக்கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ​​​​​​​​​​பார்வையாளர்களுக்கான போட்டியில் ஆர்வமாக கலந்துகொண்ட பெற்றோர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டுக்களை பெற்றனர்.

இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கேடையங்கள் வழங்கப்பட்டு , இல்லப்போட்டியில் முதலாம் இடத்தை தட்டிச்சென்ற இல்லத்துக்கு சுற்றுக்கிண்ணமும் வழங்கப்பட்டது.

 

 

Leave a comment