இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தினை எடுத்து வந்த இரு இந்திய பிரஜைகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்கள் இந்தியா -மதுரையில் இருந்து நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளனர்.