ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை – ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம்

243 0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் மீண்டும் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது குறித்த விடயத்துக்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Leave a comment