அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர்  இலங்கை வந்தார்

230 0

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் ஜூலி பிஷப் இன்று மாலை இலங்கை வந்தார்.

இலங்கையில் அவர் வெளிவிவகார அமைச்சர் ரவீ கருணாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ள அவர் இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரண திட்டம் தொடர்பில் அவர் அறிவிக்கவுள்ளார்.

Leave a comment