முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

1945 0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment