பேருந்து விபத்தில்-10 மாணவர்கள் வைத்தியசாலையில்

203 0

கினிகத்தேன பகதுலுவ பிரதேசத்தில் இருந்து கினிகத்தேன ஊடாக நோட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து ஒன்றை தனியார் பேருந்து முந்திச் செல்ல முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தினால் பாடசாலை

மாணவர்கள் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மாணவி ஒருவரும்இமேலும் இரண்டு மாணவர்களும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவளை-விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 6 மற்றும் 7ஆம் தரங்களில் கல்வி கற்பவர்கள் என்றும் கினிகத்தேன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தினையடுத்து குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment