முல்லைத்தீவில் வெடிப்பு-8 மாணவர்கள் மருத்துவமனையில்

193 0

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த பாடசாலையில், டெங்கு சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, குப்பைக்கூளங்களுக்கு இடையில் இருந்த ஜெலட்டின் குச்சிகளால் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த எட்டு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு மாணவிகளும் இரண்டு மாணவர்களுமே இதன்போது காயமடைந்திருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment