மன்னாரில் விபத்து – மாணவி பலி

281 0

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் கருசல் சந்தியில் இன்று பிற்பகல் இடம் பெற்ற விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து கருசல் வீதியூடாக மன்னார் சென்ற டிப்பர் ரக வாகனத்தில் மோதியே குறித்த மாணவி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்தில் ஒன்றுதிரண்ட மக்கள், குறித்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதியையும், உதவியாளரையும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், குறித்த இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் புதுக்குடியிருப்பில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புஸ்ஸல்லாவையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்ததொன்றில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

லொறி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 4 பேரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment