பிக்குமார் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுப்பாடு

377 0

அனைத்துப் பல்கலைக்கழக பிக்குமார் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இன்று கொழும்பு – கோட்டை பகுதியில் இந்தப் போராட்டம் இடம்பெறவிருந்ததாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸாரால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இது குறித்து தகவலளிக்கப்பட்டது.

இதற்கமைய, பொதுமக்கள், வாகனங்களுக்கு பாதிப்பு மற்றும் இடைஞ்சல் ஏற்படும் வண்ணம் ஆர்ப்பாட்டப் ​பேரணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும் அரச அலுவலகங்களில் அத்துமீறி நுழைதல் மற்றும் அமைதியை சீர்குலைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment