வற்வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

353 0

vat_CIஅரசாங்கம் விதித்துள்ள வற்வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நாடுதழுவிய போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.

இதற்கமைய நாளை அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தவுள்ளதாக வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.

வர்த்தக சங்கங்களில் பதிவு செய்த அனைத்துக் கடை உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவித முன்னறிவித்தலுமின்றி நிதியமைச்சர் எதிர்வரும் 11ஆம் திகதி வற்வரி திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்நிலையிலேயே அரசாங்கத்துக்கெதிராக வர்த்தக சங்கங்கள் நாளை நாடுதழுவிய ரீதியில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.