சூசையின் படகு விவகாரம் குறித்த செய்திகள் உண்மையில்லை

25708 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்தியதாக கூறப்படும் படகு முல்லைத்தீவு கடலில் இருப்பதாக வௌியான தகவல்களில் உண்மையில்லை என, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். 

இந்தப் படகு அண்மையில் முல்லைத்தீவு கடலில் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எதுஎவ்வாறு இருப்பினும், இந்தத் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என, கடற்படை ஊடகப் பேச்சாளர் சமிந்த வலாகுளுகே குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் படகு ஒன்று வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதியில் கரையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், எனினும் அது எக் காரணத்திற்காகவும் கடலுக்கு அனுப்பப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அந்தப் படகில் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்க வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment