வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பான நியமன விடயம் தொடர்பில் ஆராய்வு

285 0

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பான நியமன விடயம் எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் இடம்பெறும் மத்திய சுகாதார அமைச்சில் இடம்பெறும் மாகாண சுகாதார அமைச்சர்களிற்கான மாநாட்டில் ஆராயப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பான நியமன விடயம் எதிர் வரும் 23ம் திகதி கொழும்பில் இடம்பெறும் மத்திய சுகாதார அமைச்சில் இடம்பெறும் மாகாண சுகாதார அமைச்சர்களிற்கான மாநாட்டில் ஆராயப்படவுள்ளது. இவ்வாறு ஆராயப்படுவதன் மூலம் இவை விரைவில் ஜனாதிபதியின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இது தொடர்பில் ஆராயப்படும்.

ஜனாதிபதியின் முன்னைய செயலாளரின் காலத்தில் குறித்த விடயம் ஆராய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன இருப்பினும் அவை இடம்பெறவில்லை. தற்போது குறித்த சந்திப்ஙிற்கான பணிகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் ஜனாதிபதியின் செயலாளரையும் சந்தித்து குறித்த நியமனம் தொடர்பில் உரையாடி தொட்டர்களிற்கான நியமனத்ரிற்கான ஏற்படுகளை கவனித்து வருகின்றோம்.

உண்மையில் கடந்த மாதம் இடம்பெறவேண்டிய ஜனாதிபதியின் செயலாளருடனான சந்திப்பிற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றபோதும் அது இறுதி நேரத்தில் தடைப்பட்டமையே நியமனத்திற்கான காலதாமதமாக கானப்படுகின்றது. இருப்பினும் அது விரைவில் இடம்பெறுவதற்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

Leave a comment