அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம்

358 0

Jail 3_CIதம்மை விடுதலை செய்யுமாறு கோரி இன்றும் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமது விடுதலை விரைவுபடுத்துமாறு கோரி அனுராதபுரத்திலுள்ள தமிழ் கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன், தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக, இன்று போராட்டம் ஒன்றை நடாத்த அரசியல்கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு திட்டமிட்டுள்ளது.

மேலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொழுக்குமாறு, அனுராதபுர சிறையிலிருக்கும் கைதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.