இந்திய சிறையில் உள்ள கைதி இலங்கையின் காவற்துறை பொறுப்பதிகாரிக்கு அச்சுறுத்தல்

262 0

இந்தியாவில சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லசந்தன சந்தன பெரேரா எனப்படும் அங்கொட லொக்கா என்ற பாதள உலகக்குழுவின் தலைவர் ஒருவர் முல்லேரிய காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியை அச்சுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் கோரி வந்த தமது உதவியாளரை இடையூறு செய்ய வேண்டாம் என்று அவர், குறித்த காவற்துறை அதிகாரியை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயன் என்ற பாதாள உலகக்குழுவின் தலைவரது படுகொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்பு கொண்டுள்ள அவரும், மற்றுமொரு நபரும் கடந்த மே மாதம் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக டுபாய் செல்ல முயற்சித்த வேளையிலேயே அவர்கள் கைதானமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment