இரு கட்சிகள் இணைந்து பணியாற்றுவது மிகக் கடினமான காரியம்

697 0

இரண்டு கட்சிகள் இணைந்து பணியாற்றுவது மிகக் கடினமான காரியம் எனினும், நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, இவ்வாறு இணைந்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ இலாபம் பெற்றுக் கொள்ள ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கொள்ளப்படும் பணிகளைப் பார்த்து வருங்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில், அரசியல்வாதிகளைத் தெரிவு செய்ய மக்களுக்கு முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment