சட்டவிரோத மீன்பிடி: அறுவர் கைது

243 0

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கல்பிடிய, கிளிநொச்சி மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த கடற்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக, புத்தளம் உதவி மீனவக் காரியாலயத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment