கொட்டகலை புகையிரத தண்டவளப்பாதை திருத்தப்பணி நிறைவு

263 0

கொட்டலை பகுதியில் விபத்தினால் கடும் சேதமாகிய ரயில் தண்டவாளம் திருத்தப்பணி மூன்று நாட்களின் பின்னர் நிறைவடைந்துள்ளதாக சிரேஸ்ட பொறியியலாளர் ரஞ்சித் சிஜேசிரி தெரிவித்தார். 

கடந்த 13 ம் திகதி கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில் சேவை அதிகாலை 2.30 மணியளவில் கொட்டகலை ரயில் நிலையத்தை அண்மித்த 60 அடி புகையிரத பாலத்தில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தினால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்திருந்த நிலையில் கொழும்பு – கம்பளை நாவலப்பிட்டி புகையிரத திணைக்கள அதிகாரிகளும் ஊழியர்களும் தொடர்ச்சியாக திருத்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சேதமாகிய தண்டவாளங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் விபத்தினால் சேதமாகியுள்ள 150 வருடம் பழமை வாய்ந்த 60 அடி உயரமான பாலமும் கடும் சேதமாகியுள்ளது. பாலம் முழுமையாக திருத்தியமைக்க மூன்று வாரங்கள் செல்லும் எனவும் தெரிவித்தார்.

அது வரையில் கொழும்பு – ஹட்டன் வரையிலும் பதுளை கொட்டகலை வரையிலும் புகையிரத மலையக சேவை இடம்பெறும் எனவும் தெரிவித்தார். தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட புகையிரத பெட்டிளை அற்ற கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட (கிரேன்) பாரம் தூக்கி புகையிரத பாலம் சேதமானமையினால் விபத்துக்குள்ளான பெட்டிகளை அகற்ற பயன்படுத்த முடியாத போதிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கடும் பிரயத்தனத்தினூடாக பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளம் புனரமைக்கப்படுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment