இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வெள்ளம் – 59 பேர் மரணம்

349 0

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வெள்ளம் 59 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

அத்துடன் வெள்ள நிலை காரணமாக 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் வெள்ள பாதிப்பின் காரணமாக தேசிய விலங்கியல் பூங்கா ஒன்றில் 70 விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளத்hல் மொத்தமாக 66,516 ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment