டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரிப்பு – சுகாதார அமைச்சர்

279 0

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நிகழ்வொன்றில் இதனை தெரிவித்தார்.

டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளின் புதிய பரிநாமங்களால் அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, டெங்கு நோயை மருத்துவ ரீதியான முறையில் கட்டுப்படுத்துவதற்கு, டெங்கு நோய்க்கு எதிரான மனித செயற்பாடுகள் இன்றியமையாதததாக காணப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment