பொது நியதிகளின்படி செயற்படுவதே காவல்துறையின் பொறுப்பு – பூஜித் ஜெயசுந்தர

315 0

புத்தளம் உடப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் காவல்துறைமா அதிபர் இதனை தெரிவித்தார்.

மக்கள் தீவிரவாதத்தினாலும் அநீதியினாலும் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் மீண்டும் காவல்துறையின் அசாதாரண செயற்பாடுகளால் பாதிக்கப்படுவதற்கு தயாராக இல்லை.

சிக்கல்களுக்கு முகம் கொடுத்து காவல்துறையின் ஊடாக நியாயத்தை பெற்றுக்கொள்ளும் எதிர்ப்பார்ப்பில் வரும் மக்களுக்கு, காவல்துறையினர் பேசும் வார்த்தைகள் முதற்கொண்டு மன நிம்மதியை ஏற்படுத்தவதாக அமைய வேண்டும் என காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்;ளார்.

எனவே தனிப்பட்ட நியதிகளுக்காகவன்றி மக்களின் நலனை இலக்காக கொண்டு காவல்துறை செயற்பட வேண்டும் என காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment