கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் கடற்படை மருத்துவமனையில் அனுமதி

335 0

கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி தசநாயக்க வெசரை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் அவர் தொடர்பு கொண்டிருந்த குற்றத்திற்காக அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் வெலிசர கடற்படை மருத்துவமனையில் வைத்து கைதுசெய்யப்பட்டார்

இவர்  கோட்டை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவர் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஆலோசனைக்கு அமைய அவர் வெலிசர கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Leave a comment