கஷ்டத்தில் விழுந்துள்ள அரசாங்கம் – மகிந்த ராஜபக்ஷ

4797 0

அரசியல் லாபங்களுக்காக தொலைநோக்கின்றி செயற்பட்டு கஷ்டத்தில் விழுந்துள்ள அரசாங்கம், அந்த தவறுகளை தம் மீது சுமத்திவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

பாணதுரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வணக்க ஸ்தலங்களுக்கான வரி அறவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய செயற்பாடுகளின் விளைவுகள் அனைத்தும் பின்னர் தம் மீது சுமத்தப்படுவதாக மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கு வரும் சூழலை அரசாங்கம் தோற்றுவித்திருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment