மீதொடமுல்லை குப்பை மேட்டு சரிவில் பலியான மக்களின் 3வது மாத நினைவு அஞ்சலி நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
மீதொடமுல்லை மக்களால் இந்த நினைவஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்பரல் மாதம் 14ஆம் திகதி மீதொடமுல்ல குப்பை மேட்டு சரிவு இடம்பெற்றது.
இதில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதனை தொடர்ந்து அங்கு குப்பை கொட்டுவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் ஏற்பட்டன.
இதற்கமைய இதன் தாக்கம் இன்றுவரை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.